Adayalam Inter School Tamil Competition

This Competition is Postponed. Date of the competition will be declared later.

நாதெள்ளா வித்யோதயா
வெங்கடாபுரம், அம்பத்தூர், சென்னை-53.
தொலைபேசி எண்கள் : 9840391222 / 04426862810

“வீழ்வது நாமாயினும்; வாழ்வது தமிழாகட்டும்.”

போட்டியாளர்களுக்கான விதிமுறைகள்:
1. போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் போட்டி ஒன்றுக்கு ரூ.150/- பதிவுக்கட்டணமாக செலுத்துதல் வேண்டும்.
2. போட்டியாளர்கள், அந்தந்த பிரிவுகளில் இருக்கும் மூன்று போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்.
3. ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியாக பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும்.
4. கவிதை எழுதும் போட்டிக்கான தலைப்பு, ஒரு சில நிமிடங்களுக்கு முன்னால் தெரிவிக்கப்படும்.
5. சொல் விளையாட்டிற்கான அறிவிப்புகள், போட்டியாளர்களுக்கு முன்னரே தெரிவிக்கப்படமாட்டாது.
6. போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
7. முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசிற்கான போட்டியாளர்களை தேர்வு செய்வதில், நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
8. கவிதை மற்றும் சொல் விளையாட்டிற்கான தாள் மற்றும் நகல்கள் போட்டியாளர்களுக்கு மீண்டும் வழங்கப்படமாட்டாது.
9. திருக்குறள் கதைப் பகுதியில், நடுவர்கள் கேட்கும் குறளுக்கேற்ற கதையை சொல்லுதல் வேண்டும்.
10. மூன்றாம் பிரிவு தனிப்பாடலுக்கான பாடல் வரிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
11. குழுப்பாடலில் மூன்று முதல் ஐந்து மாணவர்கள் வரை கலந்து கொள்ளலாம்.
12. போட்டியாளர்கள் பள்ளி சீருடையில் வருதல் வேண்டும்.
13. பள்ளியில் சிற்றுண்டிச்சாலை (Canteen)வசதி உண்டு.
14. போட்டிகள் சரியாக 9 மணியளவில் ஆரம்பமாகும்.

“அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொண்டு,
பரிசுகளைப் பெற்றுச் செல்ல வாழ்த்துகிறோம்.”

Last Date to Register : August 31, 2018